தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 4, 2020, 6:02 PM IST

ETV Bharat / state

இருதரப்பினரிடையே மோதல்: இருவர் படுகாயம்!

புதுக்கோட்டை: அறந்தாங்கி அடுத்த மாம்பள்ளத்திவயல், கூத்தனூர் கிராமத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் இருவர் படுகாயமடைந்து அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

two-injured-in-clash-between-two-sides
two-injured-in-clash-between-two-sides

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்துள்ள மாம்பள்ளத்திவயல் கிராமத்தில் குளத்தில் குளிக்கச் சென்ற இருவரிடம் கூத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த சிலர் தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு இறுதியில் கைகலப்பாக மாறியது.

இதில் மாம்பள்ளத்திவயல் பகுதியைச் சேர்ந்த இருவரும் படுகாயமடைந்துள்ளனர். பின்னர் அவர்களை அருகிலிருந்தவர்கள் மீட்டு, அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அதைத்தொடர்ந்து படுகாயமடைந்த இருவரின் உறவினர்களும், தகராறில் ஈடுபட்டவர்களைக் கைதுசெய்யக்கோரி, நாகுடி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அறந்தாங்கி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயசீலன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில், குற்றவாளிகள் மீது வழக்குப்பதிந்து கைதுசெய்கின்றோம் என உறுதியளித்ததைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.

இதையும் படிங்க:கோவையில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுவந்த 3பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details