புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை கொடும்பாளூர் சத்திரத்தைச் சேர்ந்தவர் மிதுன்கிஷோர்(23). அவரும் அவருடைய நண்பர்களுமான அதே பகுதியைச் சேர்ந்த அரவிந்த்(23), பரத்(23) மூவரும் காரில், சத்திரத்திலிருந்து விராலிமலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்.
வடகாட்டுப்பட்டி பிரிவு சாலை அருகே கார் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவர் மீது மோதிக் கவிழ்ந்தது. அப்போது திருச்சியிலிருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி கார் மீது மோதி, அதன் மீது கவிழ்ந்தது.