தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 14, 2020, 10:55 PM IST

ETV Bharat / state

திருச்சியில் கடத்தப்பட்ட இளைஞர்... புதுக்கோட்டையில் அடித்துக்கொலை!

திருச்சி: பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில், 10 பேர் சேர்ந்து ஒருவரைக் கடத்தி கட்டிவைத்து அடித்துக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டச் செய்திகள்  திருச்சி இளைஞர் கடத்திக் கொலை  புதுக்கோட்டையில் இளைஞர் அடித்துக்கொலை  pudukkottai district news  pudukkottai youth murder
திருச்சியில் கடத்தப்பட்ட இளைஞர்...புதுக்கோட்டையில் அடித்துக்கொலை

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அக்பர் என்பவரை திருச்சியை சேர்ந்த பத்து பேர் கொண்ட கும்பல் கடத்தி புதுக்கோட்டை-திருச்சி மாவட்ட எல்லையான செங்கலாக்குடி கிராமத்திற்கு கொண்டுவந்துள்ளது. அங்கு, அவரை கட்டிவைத்து அந்த கும்பல் தாக்கியதில் அக்பர் உயிரிழந்துவிட்டார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த மண்டையூர் காவல்துறையினர், அக்பரின் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இக்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கும்பலைத் தேடிவருகின்றனர்.

திருச்சியில் கடத்தப்பட்ட இளைஞர்...புதுக்கோட்டையில் அடித்துக்கொலை

அக்பருக்கும் மற்றொருவருக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்ததாகவும், அந்த கும்பலால் அக்பர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இதையும் படிங்க:ஆண்டிபட்டியில் மகளைக் கொலை செய்த தந்தை!

ABOUT THE AUTHOR

...view details