புதுக்கோட்டை: பெரியார் நகரில் தரையிலிருந்து மூன்று மாடிக் கட்டடம் ஒன்றை நான்கு அடி உயரத்திற்கு உயர்த்தி பணியை செய்துவருகிறது மதுரையை சேர்ந்த ஸ்ரீ மீனாட்சி அசோசியேஷன் என்ற தனியார் நிறுவனம்.
இதுகுறித்து தனியார் நிறுவனத்தின் தலைவரான கட்டடப் பொறியாளர் அன்பில் தர்மலிங்கம் கூறியபோது, "இதுவரை கட்டிய 15 கட்டடங்களும் எந்தவித பிரச்சினையும் இன்றி நன்றாக அமைந்தது. தற்போது பதினாறாவது கட்டடமாக பெரியார் நகரில் கட்டப்பட்டுவரும் மூன்று மாடிக் கட்டடத்தை ’லிஃப்டிங் அண்ட் ஷிஃப்டிங்’ என்ற முறையில் 415 டன் எடை கொண்ட 2,480 சதுர அடி அளவிலான கட்டடம் கடந்த 30 நாள்களாக பணியாற்றி நான்கு அடி உயரத்திற்கு தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.