புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள தீயத்தூர் கிராமத்தில் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் விழாவில் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் கூறியதாவது.
"தமிழ்நாட்டில் நடைபெறும் மருத்துவர்கள் போராட்டம் கண்டிக்கத்தக்கது. ஏனெனில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். மக்கள் சேவைக்கு மருத்துவர்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர். அதனால் அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து அதற்கேற்றாற்போல அரசாங்கம் அவர்களுக்கு தேவையானதைச் செய்து இந்தப் பிரச்னையை தீர்த்து வைக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து" என்று கூறினார்.