புதுக்கோட்டை: திருமயம் ஊமையன்கோட்டையில் பிரசித்திப்பெற்ற கோட்டை பைரவர் கோயில் அமைந்துள்ளது. இங்கு வரும் பக்தர்கள் கோயில் உண்டியலில் காணிக்கை செலுத்தி வருகின்றனர். தேய்பிறை அஷ்டமி என்றால் தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் வருகை தந்து கோலாகலமாக பூசணிக்காயில் தீபம் ஏற்றியும், அன்னதானம் வழங்கியும் உண்டியலில் நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.
திடீரென நேற்றிரவு அடையாளம் தெரியாத நபர்கள், உண்டியலை உடைத்து அதிலுள்ள பணத்தை எடுத்துச் சென்றனர். இன்று காலையில் வழக்கம் போல் பூஜை செய்ய வந்த, கோயில் அர்ச்சகர் உண்டியல் உடைக்கப்பட்டு சில்லறைகள் சிதறி உள்ளதைக் கண்டு அதிர்ந்து போனார்.