புதுக்கோட்டை: கடல் கடந்து வந்த காதலுக்கு மதிப்பு கொடுத்து, கரம் சேர்த்து வைத்த புதுக்கோட்டை மாவட்டம் பெற்றோரின் செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. புதுக்கோட்டை மாவட்டம் பூசத்துறை பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் - புவனேஸ்வரி தம்பதி. பாலகிருஷ்ணன் திருச்சி பகுதியில் கைக்கடிகாரங்கள் பழுது பார்க்கும் கடையை வைத்து நடத்தி வருகிறார். இவரது மகன் அருணகிரி என்கிற அருண்பிரசாத் 22 வயதில் எம்பிஏ படித்துவிட்டு போலாந்து நாட்டில் வேலைக்காக சென்றார்.
அங்கு பணிக்குச் சேர்ந்த பிறகு சிறிது காலத்தில் தனியாக கார்களை வாடகைக்கு விடும் டிராவல் ஏஜென்சி வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவரது டிராவல் ஏஜென்சிக்கு அடிக்கடி பணி நிமித்தமாக வந்த அதே பகுதியைச் சேர்ந்த அனியா என்கின்ற அன்னா ரில்ஸ்கா என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நட்பு பின்னாளில் காதலாக மாறி, அருண் பிரசாத்தை அனியா திருமணம் செய்ய வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கி இருவருமே போலாந்து நாட்டில் சட்டமுறைப்படி நிச்சயம் செய்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து உறவினர்களிடம் அருண்குமார் கூறியவுடன் அருண்குமார் பெற்றோர், இவர்கள் காதலுக்கு மரியாதை கொடுத்து, இரு மனங்களையும் ஒப்புதல் தெரிவித்ததோடு, இந்த திருமணத்தை தமிழ் பண்பாடு, கலாச்சாரப்படி நடத்த வேண்டுமென தெரிவித்துள்ளனர்.
இந்தியா கலாச்சாரம் மற்றும் இந்து மத நம்பிக்கை கொண்ட அனியாவும் இந்தியாவுக்கு வர வேண்டுமென ஒரே முடிவில் இங்கு நடைபெறும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து காதலர்கள் இருவருக்கும் திருமணம் செய்ய பெரியோர்கள் முடிவு செய்து புதுக்கோட்டை, அன்னவாசல் செல்லும் சாலையில் உள்ள செல்லுக்குடியில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி திருமணம் இன்று (ஜூலை 09) கோலகலமாக நடைபெற்றது.