தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 16, 2021, 7:11 AM IST

ETV Bharat / state

அறந்தாங்கி அருகே 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கண்டெடுப்பு

புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே உள்ள இருப்புப்பாதையில் 40 வயதுமதிக்க தக்க ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://10.10.50.85:6060//finalout4/tamil-nadu-nle/thumbnail/15-March-2021/11022285_471_11022285_1615829510333.png
http://10.10.50.85:6060//finalout4/tamil-nadu-nle/thumbnail/15-March-2021/11022285_471_11022285_1615829510333.png

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி, கட்டுமாவடி சாலையில் உள்ள இருப்புப்பாதையில் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கிடந்ததை பார்த்த பொதுமக்கள் அறந்தாங்கி காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தொடர்ந்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து இறந்த நபர் யார், கொலையா அல்லது தற்கொலையா என பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details