புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே தச்சங்குறிச்சி கிராமத்தில் உள்ள அடைக்கல அன்னை ஆலயத்தில் ஆண்டுதோறும் புத்தாண்டையொட்டி ஜனவரி 1ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். கடந்த 2017ஆம் ஆண்டுக்கு பின்பு பாதுகாப்பு காரணங்களுக்காக ஜனவரி 1ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால், ஜனவரி 2ஆம் தேதி போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன.
இந்த ஆண்டும் ஜனவரி 2ஆம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அக்கிராமத்தைச்சேர்ந்த இளைஞர்கள் மற்றும் விழாக்குழுவினர் திட்டமிட்டனர். ஆனால், அரசிடமிருந்து அனுமதி கிடைக்காததால், ஜனவரி 6ஆம் தேதி போட்டியை நடத்த திட்டமிட்டனர்.