புதுக்கோட்டை: கரோனா விழிப்புணர்வு சுவர் விளம்பரம் எழுதுவதில் விடப்பட்ட டெண்டரை ரத்து செய்து, அதனை ஓவியர்களுக்கு வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஓவியர் சங்கத்தினர் காத்திருப்புப் போராட்டம் நடத்தினர்.
மத்திய அரசு அனைத்துக் கிராமங்களிலும் கரோனா விழிப்புணர்வு சுவர் விளம்பரம் எழுத உத்தரவிட்டு, அதற்கான நிதியை ஒதுக்கியுள்ளது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கிராமங்களிலும் ஒதுக்கீடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்பணிகளை ஓவியர்களுக்கு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஓவியர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்தனர்.
தமிழ்நாடு ஓவியர்கள் சங்கத்தினர் தர்ணா: