புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் இருந்து திருச்சி நோக்கி காரில் ஹைதராபாத்தைச் செர்ந்த ஐந்து பேர் சென்றுள்ளனர். அப்போது எதிரே திருச்சியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி வந்த சரக்கு வாகனம், சிப்காட் அருகே எதிரெதிரே வந்தபோது நேருக்கு நேர் மோதி விபத்துள்ளானதாகக் கூறப்படுகிறது.
மேலும் அவ்வழியாக வந்த மற்றொரு காரும் விபத்துக்குள்ளான கார் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் சென்ற ஹைதராபாத்தைச் சேர்ந்த ராஜேஷ், லெக்ஷ்மா, நரயனமா, ரமேஷ், யடாலெட்சுமி, ஆகிய 5 பேர் உள்பட புதுக்கோட்டை அய்யனாபுரத்தைச் சேர்ந்த முகமது ரபிக் (23), கானாடுகாத்தான் பகுதியைச் சேர்ந்த அப்துல்லா (39), மற்றும் 3 பேர் உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர்.