புதுக்கோட்டை அருகே கே. புதுப்பட்டி காவல் சரகத்திற்குட்பட்ட குறிச்சி கிராமம் காத்தான்குடி கண்மாயில் 35 வயது மதிக்கத்தக்க கொலை செய்யப்பட்ட ஆண் சடலம் கடந்த 2015ஆம் ஆண்டு டிச. 21ஆம் தேதி கயிற்றால் கட்டப்பட்டு கரை ஓரம் கிடந்தது.
கடந்த 4 வருடங்களாக கொலையாளி யார் என்பது தெரியாமல் இருந்து வந்த நிலையில் பொன்னமராவதி டிஎஸ்பி தமிழ்மாறன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளைத் தேடி வந்தனர். இந்நிலையில், அப்துல்காதர், பிரபு, மணிகண்டன் ஆகிய மூன்று குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர்.
காவலர்களுக்கு ரிவார்டு வழங்கிய எஸ்பி அருண்குமார் மதுரையில் ஜல்லிக்கட்டுத் திருவிழா - மாடுபிடி வீரர்களுக்கு டோக்கன் ரெடி
தலைமறைவாக இருந்த இரண்டு நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இறந்து போனவர் சென்னை செம்மஞ்சேரியைச் சேர்ந்த பாலு என்பவர் என்றும், இவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்ததாகவும் கொலையாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இந்தக் கொலை சம்பவத்தில் பொன்னமராவதி டிஎஸ்பி தமிழ்மாறன் தலைமையில் துரித நடவடிக்கை எடுத்து கொலையாளிகளை கைது செய்வதற்கு காவல் துறை சார்பாக ரிவார்டு வழங்கப்பட்டு பாராட்டப்பட்டனர்.