தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 8, 2019, 11:30 PM IST

ETV Bharat / state

குடிநீர் தேவை பூர்த்தி செய்யயப்படும்- ஆட்சியர் உறுதி!

புதுக்கோட்டை: பொது மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முக்கியத்துவமளித்து பணியாற்ற வேண்டுமென அலுவலர்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.

குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முக்கியத்துவம்- மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி!

குடிநீர் பிரச்சினை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி கூறியதாவது:

கோடை காலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாரமும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் வினியோகம் தொடர்பாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 497 கிராம ஊராட்சிகளில் குடிநீர் தேவையை கணக்கிட்டு சீரான குடிநீர் வழங்குவதற்காக புதிதாக மாற்று ஆழ் குழாய் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முக்கியத்துவமளித்து பணியாற்ற வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details