தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியில் திருநங்கைகள்! - Pudukottai transgenders planting trees

புதுக்கோட்டை: கஜா புயலால் சேதமடைந்த மரங்களை மீட்கும் நோக்கில் திருநங்கைகள் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கியுள்ளனர்.

Pudukottai transgenders

By

Published : Oct 18, 2019, 4:23 PM IST

புதுக்கோட்டை அருகே நெடுஞ்சேரி கிராமத்தில் உள்ள பாசன கண்மாயில் இன்று திருநங்கைகள் அறக்கட்டளை சார்பில் முப்பதுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் ஒன்றுகூடி மாவட்ட தலைவர் அசினா தலைமையில் பனம் விதைகள், மரக்கன்றுகள் நட்டு வைத்தனர்.

கடந்த வருடம் கஜா புயலால் பாதிப்படைந்த புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன, விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருந்து வந்தது. மீண்டும் அம்மாவட்டத்தில் அரசு சார்பாகவும் பல்வேறு அமைப்புகள் சார்பாகவும் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து திருநங்கைகளும் ஒன்று சேர்ந்து கிராமப்புறங்களில் உள்ள பாசன கண்மாய் கரைகளில் மரக்கன்றுகளை நட்டு வைத்து வருகின்றனர். நாட்டிற்காக ஏதேனும் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பனை விதைகளை நடும் பணியில் திருநங்கைகள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் பாடல் பாடிக் கொண்டே பனை விதைகளை நட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியில் திருநங்கைகள்!

மேலும் படிக்க:20 ஆண்டுகள் பழைமையான சந்தன மரம் வெட்டிக் கடத்தல்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details