புதுக்கோட்டை மாவட்டத்தில் துணை வட்டாட்சியர் அலுவலர்களை நியமிக்கக்கோரி மாவட்ட வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கத்தினர் முந்நூறுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடத்திவருகின்றனர்.
இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கத்தின் தலைவர் திருமலை பேசுகையில், "துணை வட்டாட்சியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப உயர் நீதிமன்றம் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு வெகு நாட்களாகின்றன. ஆயினும் துணை வட்டாட்சியர்களுக்கான பணியிடங்களை நிரப்பாமல் மாவட்ட நிர்வாகம் இழுத்தடித்து வருகிறது.