தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 18, 2020, 11:54 PM IST

ETV Bharat / state

புதுக்கோட்டையில் ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

புதுக்கோட்டை: ஆட்டோ தொழிலாளர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

protest
protest

தமிழ்நாடு முழுவதும் ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, புதுக்கோட்டை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகில் அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜின்னா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில், ஆட்டோ தொழிலாளர்களை பாதுகாக்க அனைத்து ஆட்டோ தொழிலாளர் குடும்பத்திற்கும் மாதம் 7 ஆயிரத்து 500 ரூபாய் நிவாரணம் வழங்கிட வேண்டும், எப்.சி இன்சுரன்ஸ் பர்மிட் முடிந்த நாளிலிருந்து ஓராண்டுக்கு நீட்டிப்பு செய்திட வேண்டும்.

மேலும், வாகனம் பறிமுதல் செய்வதை கைவிட அரசாணை வெளியிட வேண்டும், நலவாரியத்தில் சேர்வதற்கு ஆன்லைன் குளறுபடிகளை சரி செய்ய வேண்டும், ஆட்டோ தொழிலாளர்கள் கூட்டுறவு வங்கிகள் மூலம் ஒரு லட்சம் கடன் வழங்க வேண்டும், தனியார் வங்கி உள்பட ஃபைனான்ஸ் வாகன கடன் தவணையை மேலும் ஆறு மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதையும் படிங்க:ஏஎஃப்டி பஞ்சாலையை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

ABOUT THE AUTHOR

...view details