புதுக்கோட்டை: பொன்னமராவதி அருகே பொது சுடுகாட்டை ஆக்கிரமித்து பிணத்தை அடக்கம் செய்யவிடாமல் தடுத்த ஆக்கிரமிப்பாளர்களை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொன்னமராவதி ஒன்றியம் பி. உசிலம்பட்டி பஞ்சாயத்தில் உள்ள ஏனமேடு என்கிற பகுதியில் கடந்த சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக அனைத்து மக்களும் பயன்படுத்தக்கூடிய பொது சுடுகாடு உள்ளது. அதை தனிநபர் ஆக்கிரமித்து கம்பிவேலி முள்வேலி அமைக்கப்பட்டபோதே உடனடியாக நடவடிக்கை எடுத்து சுடுகாட்டை மீட்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென சிபிஎம் பொன்னமராவதி ஒன்றியக் குழு வலியுறுத்தினர்.
இந்தநிலையில் இன்று இறந்துபோன ஏனமேட்டை சேர்ந்த எம்.செல்வராஜ் (63) என்பவர் உடலை புதைக்க அந்த ஊர் மக்கள் சுடுகாட்டிற்கு சென்ற போது மேற்படி சுடுகாட்டை பட்டா இருப்பதாக கூறி ஆக்கிரமித்துள்ள பி.உசிலம்பட்டியை சேர்ந்த ராமசாமி என்பவர் பிணத்தை சுடுகாட்டில் புதைக்கவிடாமல் ஊர் மக்களை தடுத்து மிரட்டியுள்ளார்.