தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 4, 2019, 7:49 AM IST

ETV Bharat / state

பொன்னமராவதி கலவரம்: சிபிஎம் உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு!

புதுக்கோட்டை: பொன்னமராவதி கலவரத்தில் கைது செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்கள் சிலரை காவல் துறையினர் விடுதலை செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்தனர்.

சிபிஎம் உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு

ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரை இழிவாகப் பேசிய ஆடியோ, வீடியோ வெளியாகி பொன்னமராவதியில் பெரும் கலவரம் ஏற்பட்டது. இந்தக் கலவரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இதில் எந்த தவறும் செய்யாத அப்பாவி மக்களின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனை உடனடியாக காவல் துறையினர் ரத்து செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் கூறுகையில், "பொன்னமராவதியில் ஏற்பட்ட கலவரத்திற்கு காரணமானவர்களை மட்டுமே கைது செய்ய வேண்டும். உணர்ச்சிபூர்வமாக போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்திருப்பது கண்டனத்துக்குரியது. அவர்கள் மீதுள்ள வழக்கை காவல் துறையினர் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தவறு செய்யாமல் தண்டனை அனுபவிக்க முடியாது" என தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details