புதுக்கோட்டை:தமிழ்நாட்டில் ரவுடிசம், கொலை, கொள்ளை போன்ற குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் உத்தரவுப்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக ரவுடி பட்டியலில் உள்ள குற்றவாளிகள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
திருக்கோகர்ணம் காவல் சரகத்தில் தொடர் குற்றச் செயல், ரவுடிசம் செய்து வந்த திருக்கோகர்ணத்தைச் சேர்ந்த சின்ன மணிகண்டன் (27), விஜய் என்ற கோழி விஜய் (21), கருப்பசாமி (21) ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.