தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பீரோவை உடைத்து 20 சவரன் நகைகள் திருட்டு: குற்றவாளிகளுக்கு போலீஸ் வலை! - 20 சவரன் நகைகள் திருட்டு

புதுக்கோட்டை: கீழ இரண்டாம் பகுதியில் தனியாக வசித்துவரும் பெண்ணின் வீட்டை உடைத்து, 20 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்ற கும்பலை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

பீரோவை உடைத்து 20 சவரன் நகைகள் திருட்டு
பீரோவை உடைத்து 20 சவரன் நகைகள் திருட்டு

By

Published : Nov 2, 2020, 7:33 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் கீழ இரண்டாம் பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி. இவரது கணவர் இறந்துவிட்டார். இந்நிலையில், வீட்டில் தனியாக வசித்துவந்த தனலட்சுமி, தனது வீட்டை பூட்டிவிட்டு கீழசெவல்பட்டி கிராமத்தில் வசிக்கும் தனது உறவினர் வீட்டிற்கு நேற்று முன்தினம் (அக். 31) சென்றுள்ளார்.

பின்னர், இன்று (நவ. 02) அவர் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, அவர் வீட்டினுள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 20 சவரன் தங்க நகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புதுக்கோட்டை டவுன் காவல் துறையினர், வீட்டில் சோதனை நடத்தினர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் திருட்டுக் கும்பலை வலை வீசி தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: நிறுத்திவைக்கப்பட்ட கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளை

ABOUT THE AUTHOR

...view details