நாடு முழுவதும் கரோனா வைரஸின் பாதிப்பு அதிகமாகி வரும் நிலையில், 144 தடை உத்தரவால் பொதுமக்கள் வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் காய்கறிகள் வாங்குவதற்கும், அத்தியாவசிய பொருள்களை வாங்கவும் மக்கள் அதிக அளவில் வெளியே வருவதால், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்கின்றனர்.
இதைக் கட்டுப்படுத்தும் விதமாக புதுக்கோட்டை நிஜாம் காலனியில் கூட்டுறவு துறையின் சார்பில் நடமாடும் காய்கறிக் கடை அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் உமா மகேஷ்வரி இன்று தொடக்கிவைத்தார். இந்த காய்கறிகளை பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு, வரிசையாக நின்று வாங்கிச் சென்றனர்.