புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக காடுகளை அழித்து தைல மரம் என அழைக்கப்படும் யூகலிப்டஸ் மரங்களை நட்டு சுமார் 75 ஆயிரம் ஏக்கர் நிலங்களை வீணாக்கி வந்தனர். யூகலிப்டஸ் மரங்களை வளர்ப்பதால் நிலத்தடி நீர் அதிகளவில் உறிஞ்சப்பட்டு வெப்பம் வெளியிடப்படுவதால் அம்மரங்களின் பக்கத்தில் ஒரு புல்கூட முளைக்க முடியாத அளவிற்கு விஷத்தன்மை வாய்ந்தது.
எனவே இதனை தடை செய்யக்கோரி விவசாயிகள் மற்றும் பல்வேறு இயக்கங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் கொடுத்தும், போராட்டங்களை நடத்தியும் எந்த வித பயனும் இல்லாததால் புதுக்கோட்டை விவசாயிகள் சங்க செயலாளர் தனபதி , மணிகண்டன் உள்ளிட்ட விவசாயிகள் இணைந்து மதுரை மாவட்ட உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர்.