தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 11, 2020, 12:36 AM IST

Updated : Jul 11, 2020, 12:41 AM IST

ETV Bharat / state

டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு - மண்ணெண்ணெய் கேனுடன் பொதுமக்கள் போராட்டம்!

புதுக்கோட்டை: டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மண்ணெண்ணெய் கேன்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மண்ணென்ணைக் கேன்களுடன் போராட்டம்
மண்ணென்ணைக் கேன்களுடன் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா வெண்ணாவல்குடியில் டாஸ்மாக் கடை இல்லாமல் இருந்தது. இப்பொழுது புதிதாக டாஸ்மாக் கடை திறக்க சிலர் ஏற்பாடு செய்து கடையையும் கட்டியுள்ளனர்.

இந்நிலையில், கரோனா பாதிப்பால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் சோற்றுக்கே வழியில்லாமல் திண்டாடுவதாகவும் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்தும் அப்பகுதி மக்கள் மண்ணெண்ணெய் கேன்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த ஆலங்குடி காவல் ஆய்வாளர் அலாவுதீன் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். கடை திறக்கப்படாது என அவர் உறுதியளித்ததின்பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டது.

இதையும் படிங்க: உ.பி.யில் பெண் கொடூரக் கொலை: துண்டு துண்டா கிடந்த சடலம்...

Last Updated : Jul 11, 2020, 12:41 AM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details