புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் காளியம்மன் கோயில் பகுதியில் சௌராஷ்டிரா உறவினர்களுக்குச் சொந்தமான கோவில் இடத்தில், சுப்புராமன் என்பவர் நகராட்சி அனுமதி இல்லாமல் திருமண மண்டபம் மற்றும் தங்கும் விடுதிகள் கட்டி நடத்தி வந்தார்.
இந்நிலையில், சௌராஷ்ட்ரா உறவின்முறை சார்பாக மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் அனுமதியின்றி கட்டப்பட்ட திருமண மண்டபம் மற்றும் தங்கும் விடுதியை மூடி சீல் வைக்க உத்தரவிட்டனர்.