புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகேவுள்ள காலாடிப்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி செல்வராஜ். இவரது மனைவி அகிலாண்டம் (30). இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இதில், மூத்த மகன் கேசவன் என்பவர் மாற்றுத்திறனாளி.
இந்நிலையில், குடிப்பழக்கம் உள்ள செல்வராஜ் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறில் ஈடுபட்டுவந்துள்ளார்.
இதனால், வாழ்க்கையில் வெறுப்படைந்த அகிலாண்டம், வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டு தனது குழந்தைகளுக்கும் கொடுக்க முடிவுசெய்தார். விஷத்தை 3 பேருக்கும் கொடுக்க முயன்றபோது, 2 குழந்தைகள் வீட்டைவிட்டு வெளியே தப்பியோடிவிட்டனர்.