தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 7, 2019, 6:09 PM IST

ETV Bharat / state

உலக வங்கி தமிழ்நாட்டிற்கு 2,900 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு- அமைச்சர் விஜயபாஸ்கர்!

புதுக்கோட்டை :  உலக வங்கி தமிழ்நாட்டிற்கு 2,900 கோடி ரூபாய் நிதி ஒதுக்க்கியுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

minister vijayabasker press meet
minister vijayabasker press meet

புதுக்கோட்டையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ”உலக அளவில் போட்டி போடும் அளவிற்கு தமிழ்நாடு சுகாதாரத் துறை மேம்பாடு அடைந்துள்ளது.

உலக சுகாதார நிறுவனம் நமக்கு நிர்ணயித்த இலக்கை அதாவது 2030க்குள் அடைய வேண்டிய இலக்கை 2019க்குள் தமிழ்நாடு சுகாதாரத்துறை செய்து சாதனை படைத்துள்ளது.

அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர் சந்திப்பு
சுகாதாரத்துறை மேம்பாட்டிற்காக உலக வங்கி தமிழ்நாட்டிற்கு 2,900 கோடி ரூபாய் நிதி உதவி செய்துள்ளது. இதனைக் கொண்டு உலகத்தரம் வாய்ந்த சிகிச்சைகள் அரசு மருத்துவமனைகளில் வழங்க நான்கு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. விரைவில் இந்த திட்டங்களை முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details