தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'திருமாவளவனை ஏன் கைதுசெய்யவில்லை?' - திருமாவளவன்

புதுக்கோட்டை: திருமாவளவனை கைதுசெய்வதற்கு உண்டான அழுத்தத்தை தமிழ்நாடு அரசுக்கு கொடுப்போம் என பாஜக மூத்தத் தலைவர் எச். ராஜா கூறியுள்ளார்.

raja
raja

By

Published : Oct 26, 2020, 7:45 PM IST

வாராப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த பாஜக மூத்தத் தலைவர் எச். ராஜா, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”பெண்களுக்கு எதிராகப் பேசிய விசிக தலைவர் திருமாவளவனை தமிழ்நாடு அரசு ஏன் இதுவரை கைதுசெய்யவில்லை? உடனடியாக திருமாவளவனை கைதுசெய்யாவிட்டால், அதற்கான அழுத்தத்தை பாஜக கொடுக்கும்.

நவராத்திரியின்போது இந்து மதத்தை இழிவுப்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு, பெண்கள் குறித்த கருத்தை, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் தூண்டுதலின்பேரில் திருமாவளவன் பேசியுள்ளார்.

இந்தப் பிரச்சினை தேர்தல் நேரத்தில் கடுமையாக எதிரொலிக்கும், போராட்டம் வெடிக்கும். கார்ட்டூனிஸ்ட் வர்மாவை கைதுசெய்த தமிழ்நாடு அரசு, திருமாவளவனை கைதுசெய்யும் வரை வேறு பிரச்சனைக்கு இடம் இல்லை” என்றார்.

திருமாவளவனை ஏன் கைது செய்யவில்லை? - எச்.ராஜா கேள்வி!

இதையும் படிங்க: ஏ.சி. சண்முகத்துடன் ரஜினி திடீர் ஆலோசனை!

ABOUT THE AUTHOR

...view details