புதுக்கோட்டை மாவட்டம் கீழச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் தனலட்சுமி (20). இவரைக் கடந்த 24ஆம் தேதி இரவு முதல் காணவில்லை என்று பெற்றோர்கள் ஊர் முழுவதும் தேடியுள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (40). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி, அவரது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இவருக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது.
அதன் பிறகு சிலட்டூர் பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணை திருமணம் செய்த இவர், தற்போது மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தனலட்சுமியின் வீட்டின் அருகே சுரேஷ் அடிக்கடி சென்றுவந்ததால், அவரின் மீது தனலட்சுமியின் சகோதரர் முருகனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பின்னர் சுரேஷ் இல்லாதபோது அவரின் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார்.