தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதுக்கோட்டையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை - pudukkottai district news

புதுக்கோட்டை: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

By

Published : Dec 18, 2020, 11:01 PM IST

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் பாக்யராஜ். இவர் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார்.

இதுகுறித்து கீரனூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் காவல் துறையினர் பாக்யராஜை கைது செய்தனர்.

இந்த வழக்கு மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி சத்யா குற்றவாளி பாக்யராஜுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி பரிந்துரைத்தார்.

இதையும் படிங்க: 9 வயது சிறுமி உயிரிழந்ததற்கு காற்று மாசுபாடே காரணம் - இங்கிலாந்து நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details