பொங்கல் திருநாளில் மஞ்சள் கொத்து கட்டிப் பொங்கல் வைத்து மக்கள் வழிபடுவது வழக்கம். இந்த மஞ்சள் கொத்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ளன. அதில் ஒரு பகுதியாக புதுக்கோட்டை அருகே கெண்டையன்பட்டியிலுள்ள விவசாயிகள் மஞ்சள் சாகுபடி செய்துள்ளனர்.
இந்த ஆண்டு நல்ல மழை பெய்ததால், மஞ்சள் நல்ல விளைச்சலாகியுள்ளதாகவும், அதனால் விலை தாறுமாறாக குறைந்துள்ளதாகவும் விவசாயிகள் கூறியுள்ளனர். பொங்கலுக்கு இன்னும் ஓரிரு தினங்களே உள்ள நிலையில், மாவட்டத்திலுள்ள பல்வேறு ஊர்களுக்கு விற்பனை செய்வதற்காக மஞ்சள் கொத்து அறுவடை இன்று நடைபெற்றது.