புதுக்கோட்டை மாவட்டம் புத்தாம்பூர் கிராம மக்கள் சுமார் 60 பேர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மணல் எடுத்து செல்வது தொடர்பாக இன்று புகார் அளிக்க வந்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
எங்களது ஊர் புதுக்கோட்டை மாவட்டம் குறிச்சிபட்டி அருகில் உள்ள புத்தாம்பூர் கிராமம். அங்கு பல்வேறு குடும்பத்தினரும் சமுதாயத்தினரும் வசித்துவருகிறோம். எங்களுக்கு விவசாயம் மட்டுமே தொழில். அதை வைத்துதான் பிழைத்துக் கொண்டிருக்கிறோம். அதற்காக மணலையும் நீரையும் பாதுகாக்கும் சூழ்நிலையில் நாங்கள் இருக்கிறோம். ஆனால் எங்களது ஊர் நடுவே உள்ள குறிச்சி குளத்தில் ஆதனக்கோட்டைச் சேர்ந்த முருகேசன் என்பவர் அவருக்குச் சொந்தமான டிப்பர் லாரியில் சுமார் 100 லோடு மண்ணை வெட்டி எடுத்துச் சென்றுவருகிறார்.
நாங்கள் இதனை எத்தனையோ முறை தடுத்தும் அவர் கேட்பதாக இல்லை. நாங்கள் முழு ஆதாரத்துடன் தான் இதை செய்கிறோம் என்று பதில் கூறுகின்றனர். கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று புகார் அளித்தாலும் அவர் அதை வாங்கிக் குப்பையில் போட்டுவிடுகிறார்.