விவசாயிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ள வேர் மண்டல நீர் பாசன முறையை பயன்படுத்தி குறைந்த நீரில் அதிக மகசூல் பெற்று பயனடைய வேண்டும் என புதுக்கோட்டையில் வருவாய் நிர்வாக ஆணையர் சத்ய கோபால் பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
2018ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கிவைக்கப்பட்ட இ-அடங்கல் முறை வருவாய், பேரிடர் மோலண்மைத் துறையின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் இ-அடங்கல் முறை முதல் முறையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு அரசின் திட்டங்கள், சலுகைகள் விரைந்து சென்று பயனடையும் வகையில் இந்த இ-அடங்கல் முறை அமைந்துள்ளது.
விவசாய நிலங்களின் அடங்கல்கள் தற்பொழுது வருவாய்த் துறையினரால் பதிவேடுகளில் பராமரிக்கப்பட்டு வரும் நிலத்தினுடைய அடங்கல் முழுமையாகக் கணினிமயமாக்கப்படுகிறது. விவசாயிகள் இ-அடங்கல் முறையில் தங்கள் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள விவரத்தினை தாங்களே பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.