தமிழ்நாடு

tamil nadu

மின் ஒயரை மிதித்த விவசாயி, அவரது வளர்ப்பு நாய் உயிரிழப்பு

By

Published : Jul 9, 2020, 12:05 AM IST

புதுக்கோட்டை: வயல்வெளியில் அறுந்து கிடந்த மின்சார வயரை மிதித்த விவசாயி, அவரது வளர்ப்பு நாய் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மின்சார வயரை மிதித்து உயிரிழந்த விவசாயி
மின்சார வயரை மிதித்து உயிரிழந்த விவசாயி

புதுக்கோட்டை மாவட்டம், மழையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கருப்பையா (47). இவர் இன்று(ஜூலை.8) வயல்வெளிக்கு தனது வளர்ப்பு நாயுடன் (நாயகி) சென்றுள்ளார். அப்பொழுது அங்கு அறுந்து கிடந்த மின்சார வயரை தெரியாமல் மிதித்ததில் சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.
அவருடன் இருந்த வளர்ப்பு நாயும் உயிரிழந்தது. இதுகுறித்து அருகே இருந்தவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவி இடத்திற்கு வந்த காவல்துறையினர் கருப்பையாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.

வளர்ப்பு நாயை சுகாதாரப் பணியாளர்கள் எடுத்துச் சென்றனர். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விவசாயும், அவரது வளர்ப்பு நாயும் மின் ஒயரில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மாயமான இளைஞர் சடலமாக மீட்பு - கொலையாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details