தமிழ்நாடு

tamil nadu

ஈ டிவி பாரத் செய்தி எதிரொலி : மகிழ்வுடன் சொந்த ஊர் திரும்பிய மக்கள்!

புதுக்கோட்டை: தமிழ்நாட்டிற்கு கரும்பு வெட்டும் பணிக்கு வந்த ஆந்திர மாநிலத் தொழிலாளர்கள் உணவு, தங்குமிடம் இன்றி குழந்தைகளுடன் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வந்தது குறித்து நமது ஈ டிவி பாரத்தில் நேற்று செய்தி வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் தற்போது பத்திரமாக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

By

Published : May 31, 2020, 7:38 PM IST

Published : May 31, 2020, 7:38 PM IST

புதுக்கோட்டையில் சிக்கிய ஆந்திர மாநிலத் தொழிலாளர்கள்
புதுக்கோட்டையில் சிக்கிய ஆந்திர மாநிலத் தொழிலாளர்கள்

ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், மல்லபாலம் என்ற கிராமத்திலிருந்து 200க்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள், கடந்த பிப்ரவரி மாதம் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள குறும்பூர் சர்க்கரை ஆலையில் கரும்பு வெட்டும் பணிக்கு வந்தனர்.

அவர்களில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட 21 பேர் தவிர, மீதமுள்ளவர்கள் தங்களின் ஒரு மாதப் பணி முடிந்து, சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டனர். சொந்த ஊர் திரும்பாத 21 பேரும் குறுங்குளம் சர்க்கரை ஆலைக்குட்பட்டப் பகுதிக்கு கரும்பு வெட்டும் பணிக்குத் தொடர்ந்து சென்று வந்தனர். அதன்பின் கடந்த மார்ச் மாதம் கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தொடர்ந்து தோட்ட உரிமையாளர்கள், தொழிலாளர்களை பாதுகாப்பாக தங்க வைத்திருந்தபோதிலும், கரும்பு ஆலை நிர்வாகம் அவர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தைச் சரியாக வழங்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மே மாதம் முதல் வாரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டு, தங்களை சொந்த ஊர் அனுப்புமாறு மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர்.

அதனை பரீசிலித்த காவல் துறையும், வருவாய்த்துறையும் அவர்களை ஆதனகோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இரண்டொரு நாட்களில் அனுப்பிவிடுவதாகவும், அவர்களுக்குத் தேவையானதை செய்வதாகவும் மாவட்ட நிர்வாகத்தினர் தெரிவித்தனர். ஆனால், உறுதியளித்து 20 நாட்களைக் கடந்தும் எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து கொடுக்காமலும், அவர்கள் ஊர் திரும்ப எந்த ஒரு நடவடிக்கை எடுக்காமலும் அலட்சியம் காட்டி வந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மண்டபத்தின் உரிமையாளரும்; அவர்களை மண்டபத்திலிருந்து வெளியேற்றி பூட்டிய நிலையில், தங்க இடமின்றியும், நான்கு நாட்களாக உணவின்றியும் கடும் இன்னல்களை ஆந்திரத் தொழிலாளர்கள் சந்தித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்றைய தினம் இதுகுறித்து நமது ஈ டிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்தில் செய்தி வெளிவந்ததை அடுத்து, ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்ட நிர்வாகத்தினரின் கவனத்திற்கு செய்தி சென்றுள்ளது. அதனைத் தொடர்ந்து மல்லபாலம் தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அலுவலர்கள் உடனடியாக அறந்தாங்கியைச் சேர்ந்த அலுவலர்களைத் தொடர்பு கொண்டு, ஆந்திரத் தொழிலாளர்களை அழைத்துச் செல்ல ஏற்பாடுகளை செய்தனர்.

அதன்படி நேற்று இவர்கள் 27 பேரும் பத்திரமாக, ஆந்திர எல்லையான சித்தூருக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஆந்திர அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். தொடர்ந்து சொந்த ஊர் திரும்பும் முன், இவர்கள் அனைவரும் நமது ஈ டிவி பாரத் ஊடகத்திற்குத் தங்கள் நன்றிகளைத் தெரிவித்துச் சென்றனர்.

இதையும் படிங்க :ஆந்திரா தொழிலாளர்கள் உணவின்றி தவிப்பு: சொந்த ஊருக்கு அனுப்புமா அரசு?

ABOUT THE AUTHOR

...view details