புதுக்கோட்டை: கறம்பக்குடி அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 1 முதல் 5ஆம் வகுப்பு வரை 127 மாணவர்கள் பயின்று வருகின்றனர். கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் பெற்றோர்கள் பள்ளி மேலாண்மை குழுவில் விடுத்த கோரிக்கையின் படி முடிவு செய்யப்பட்டு ஆங்கில வழி கல்வி நீக்கப்பட்டது.
நேற்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஆங்கில வழி கல்வி உள்ளதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. ஆங்கில வழி கல்வி பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு நீக்கப்பட்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தது.