திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவின்படி ‘எல்லோரும் நம்முடன்’ என்ற பெயரில் இணைய வழியிலான உறுப்பினர் சேர்க்கை தற்போது தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் சார்பில் புதுக்கோட்டையில் எல்லோரும் நம்முடன் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், பெண்கள் உள்பட ஏராளமான உறுப்பினர்கள் இணைய வழியில் திமுகவில் உறுப்பினராக சேர்த்துக் கொண்டனர். அப்போது, பேசிய முன்னாள் அமைச்சரும் திமுக எம்எல்ஏவுமான ரகுபதி, “ஒரே நாளில் ஒரு லட்சம் உறுப்பினரை சேர்த்த இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும் தான். உறுப்பினர்களை மற்ற இயக்கங்கள் போல போலியாக சேர்ப்பது கிடையாது. உண்மையான உறுப்பினர்களை திமுக சேர்த்து வருகிறது” எனத் தெரிவித்தார்.