புதுக்கோட்டை:திருக்கோகர்ணம் பகுதியைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன். இவரது மகள் சுனைனா பானு. இவர் அதே பகுதியைச் சேர்ந்த பீர்முகமது என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இதன் காரணமாகப் பெண்ணின் கல்லூரி படிப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட் (கடவுச்சீட்டு) ஆகியவற்றைத் தர முடியாது என்று அவரது பெற்றோர் எனக் கூறியுள்ளனர்.
இது குறித்து காதல் தம்பதி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதேபோல், பெண்ணின் பெற்றோரும் தங்களது மகளை பீர்முகமது மிரட்டித் திருமணம் செய்துகொண்டதாக அதே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.