புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் வடக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் மற்றும் தெற்கு மாவட்டச் செயலாளர் வைரமுத்து ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், "தற்போது டெங்கு அதிகரித்து வருவதால், சுகாதாரத்துறையோடு இணைந்து கள ஆய்வுகளை அனைத்து துறைகளும் செய்து, காய்ச்சல் கண்காணிப்பு முகாம்களை நடத்த வேண்டும் என்று நானும், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் சுட்டிக் காட்டிய பிறகுதான் தற்போது அரசு ஆயிரம் முகாம்கள் தினந்தோறும் நடத்துவதற்கு முடிவு எடுத்துள்ளது.
சுகாதாரத்துறையுடன் இணைந்து, நகராட்சித் துறை, உள்ளாட்சித் துறை உள்ளிட்ட துறைகள் அனைத்தும் இணைந்து களப்பணியில் ஈடுபட்டு ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மாவட்டங்கள்தோறும் டெங்கு விழிப்புணர்வு கண்காணிப்பு கூட்டம் நடத்தப்பட வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு என்று சிறப்பு பிரிவு தொடங்க வேண்டும்" என்று கூறினார்.
மேலும், "கடந்த ஆட்சிக் காலத்தில் டெங்கு, கரோனா போன்ற நோய் பரவல் காலத்தின்போது பாதிக்கப்பட்டவர்கள், பழைய நோயாளிகள், புதிய நோயாளிகள் என கணக்கெடுத்து, அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்தோமோ, அதேபோல நடவடிக்கைகள் எடுக்கத்தான் இந்த அரசிடம் வலியுறுத்துகிறோம்.