தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாக்கடையில் இறந்து கிடந்த பச்சிளம் குழந்தை! - புதுக்கோட்டை மாவட்டத்தில் சாக்கடையில் இறந்து கிடந்த பச்சிளம் குழந்தை

புதுக்கோட்டை: ராஜகோபாலபுரம் அருகே சாக்கடைக்குள் அழுகிய நிலையில் இறந்து கிடந்த பச்சிளம் குழந்தையை காவல் துறையினர் கண்டெடுத்தனர்.

baby dead body
சாக்கடையில் விழுந்து உயிரிழந்த குழந்தை

By

Published : Dec 3, 2019, 2:04 PM IST

Updated : Dec 3, 2019, 3:16 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் ராஜகோபாலபுரம் அரசுப்பள்ளி அருகே உள்ள சாக்கடையில் ஏதோ துர்நாற்றம் வீசுவதாக எண்ணிய அப்பகுதி மக்கள் சாக்கடையின் அருகே சென்று பார்த்தனர்.

அப்போது ஒரு குழந்தை அழுகிய நிலையில் இறந்து கிடந்ததைக்கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்பு, இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த புதுக்கோட்டை மாவட்ட நகர காவல் துறையினர், குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், குழந்தை கொலை செய்யப்பட்டிருக்கிறதா, தவறி விழுந்ததா அல்லது அந்தக் குழந்தையை யாரும் சாக்கடையில் வீசிவிட்டுச் சென்றார்களா என காவல் துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பச்சிளம் குழந்தை சாக்கடைக்குள் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் இருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதையும் படிங்க: கடன் தொல்லையால் 5 மாத பச்சிளம் குழந்தையுடன் தாய் தற்கொலை!

Last Updated : Dec 3, 2019, 3:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details