875 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை
புதுக்கோட்டை மாவட்டம் மறவன்பட்டியைச் சேர்ந்தவர்கள் இந்திராணி - முத்துவீரன் தம்பதி. இந்திராணிக்கு கடந்த டிசம்பர் 19ஆம் தேதி சுகப்பிரசவத்தில், குறைமாதத்துடன் பெண்குழந்தை ஒன்று பிறந்தது. பிறக்கும் போதே 875 கிராம் எடையுடன் பிறந்த இந்தப் பச்சிளங்குழந்தை,மூச்சுத்திணறலாலும் அவதிப்பட்டது. இதையடுத்து அக்குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு, அதற்கு வெண்டிலேட்டர் கருவி மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது.
நுரையீரல் வளர்ச்சிகான சிகிச்சை
குழந்தையின் நுரையீரல் வளர்ச்சிக்காக சர்ஃபேக்டண்ட் (surfactant) மருந்தும் செலுத்தப்பட்டது. ஒரு வார கால தீவிர சிகிச்சைக்குப் பின்னர் குழந்தையின் சுவாசிக்கும் திறனில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து செயற்கை சுவாசம் நீக்கப்பட்டு குழந்தைக்கு குழாய் மூலம் சிறிதளவு பால் கொடுக்கப்பட்டது.
கிருமி தொற்றுக்கான சிகிச்சையும், மஞ்சள் காமாலைக்கான போட்டோதெரபி சிகிச்சையும் வழங்கப்பட்டது.