தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்விரோதம் காரணமாக நண்பனை கொடூரமாக கொலை செய்த ஆட்டோ ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை! - நண்பனை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

Life imprisonment to auto driver: புதுக்கோட்டையில் முன்விரோதம் காரணமாக நண்பனை கொலை செய்த குற்றத்திற்காக ஆட்டோ ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை முதன்மை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 8, 2023, 4:23 PM IST

புதுக்கோட்டை நகர் பகுதியான, அய்யனார்புரம் 3ஆம் வீதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மகன் தணேஷ்குமார் என்ற சொலிஷன் (25). இவரும் புதுக்கோட்டை, போஸ் நகர் 9ஆம் வீதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தமிழரசன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2018ஆம் வருடம், நண்பர்களாக இருந்த தணேஷ்குமாருக்கும், தமிழரசனுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.

பின்னாளில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையில் தணேஷ்குமார் புதுக்குளம் தென்கரையில் வைத்து தமிழரசனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதை மனதில் வைத்து கொண்டு கடந்த 2020-ஆம் ஆண்டு மே மாதம் 17-ஆம் தேதி பகல் 12 மணி அளவில் தணேஷ்குமார் வீட்டிற்குச் சென்ற தமிழரசன் மது அருந்த கூப்பிட்டு தனது ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார்.

பின்னர் சின்னப்பா பூங்காவில் இருந்து திருக்கட்டளை செல்லும் சாலையில் உள்ள பழைய கட்டடத்தில் இரண்டு பேரும் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது மது போதையில் இருந்த இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த தமிழரசன் தான் கையில் வைத்திருந்த மது பாட்டிலை உடைத்து தணேஷ்குமாரை குத்தியும், அங்கிருந்த பெரிய கல்லை தலையில் போட்டும் கொடூரமாக கொலை செய்தார்.

இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் இக்கொலை சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கணேஷ் நகர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் செப்று தணேஷ்குமார் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் காவல் துறையினர் தமிழரசனை கைது செய்து, விசாரணை நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி பூரண ஜெயஆனந்த் தீர்ப்பு கூறினார். இந்த தீர்ப்பில் கொலை செய்த குற்றத்திற்காக தமிழரசனுக்கு ஆயுள் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டது. அபராத தொகை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இதையும் படிங்க:காரில் வைத்து ஒருவர் எரித்துக் கொலை - தூத்துக்குடி அருகே நடந்த பகீர் சம்பவம்!

ABOUT THE AUTHOR

...view details