புதுக்கோட்டை மாவட்டம் திருமையம் தாலுகாவுக்கு உள்பட்ட கல்லூர் கிராமத்தில் ஸ்ரீ அரியநாச்சி அம்மன் செம்முனீஸ்வரர் ஆலய திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி கோயிலின் திடலில் நடைபெற்றது.
இதில் புதுக்கோட்டை, மதுரை, திருச்சி, திண்டுக்கல், சேலம், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1500க்கும் மேற்பட்ட காளைகளும் அதேபோன்று பல்வேறு மாவட்டத்தில் இருந்தும் 500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களும் பங்குபெற்றனர்.