புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எழில் நகர் பகுதியைச் சேர்ந்த தியாகு, லோகு தம்பதியரின் மகன் வர்கீஸ். ஆறாம் வகுப்பு படிக்கும் இவருக்கு இன்று பன்னிரெண்டாவது பிறந்தநாள் விழா கொண்டாடப்படவிருந்தது. பிறந்தநாளுக்கு அவரின் தந்தை ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தபோது, பிறந்தநாளை வழக்கமான முறையில் வீட்டில் கொண்டாடமால், கரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவல் துறையினருக்கும், துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருக்கும் நகராட்சி பணியாளர்களுக்கும் ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று சிறுவன் விருப்பம் தெரிவித்துள்ளார்.
அதைக் கேட்ட அவரது தந்தை தியாகு, உடனடியாக கடைக்குச் சென்று இரண்டு பிஸ்கெட் பாக்கெட் பெட்டிகளும், தண்ணீர் பாட்டிலும் வாங்கி வந்து மகனிடம் கொடுத்துள்ளார். மிகுந்த மகிழ்ச்சியடைந்த அச்சிறுவன் தந்தையை அழைத்துக் கொண்டு பிஸ்கட், தண்ணீருடன் கிளம்பியிருக்கிறார் .