தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Latest Pudukkottai News: 2,100 போதை மாத்திரைகள் பறிமுதல் - விற்பனை செய்த 6 பேர் கைது!

புதுக்கோட்டை: அறந்தாங்கியில் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த ஆறு பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

By

Published : Oct 6, 2019, 7:55 PM IST

Aranthangi

Latest Pudukkottai News: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள அரசர்குலம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மாவட்ட காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், அங்கு விரைந்த காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகிக்கும் வகையில் நடந்துகொண்ட நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவர் கையில் ஊசி செலுத்தியத்திற்கான அடையாளம் இருந்துள்ளது.

அதுபற்றி காவல்துறையினர் கேட்டபோது, அவர் போதை ஊசி பயன்படுத்தியுள்ளதும், போதை மாத்திரைகள் வாங்கி வந்ததும் தெரியவந்தது. உடனே காவல்துறையினர், அவரிடமிருந்து போதைப் பொருட்கள் விற்பனை செய்யும் இடத்தை அறிந்தனர். பின்னர் அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர், போதைப் பொருட்கள் விற்பனைச் செய்யும்போதே ஜெகன், ரியாஸ் ஆகிய இருவரை கைது செய்தனர்.

போதை மாத்திரைகள் விற்பனை செய்துவந்த 6 பேர் கைது

விசாரணையில், அவர்களுடன் சேர்ந்து வாசு, வினோத், கௌதம்ராஜா, பானுமதி ஆகிய நான்கு பேரும் போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து, தனிப்படை அமைத்து அவர்கள் நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்களிடமிருந்த 3 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இரண்டாயிரத்து 100 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்யப்பட்டன.

இதையும் படிங்க:

சிதம்பரத்தில் சிக்கிய ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்கா!

ABOUT THE AUTHOR

...view details