தமிழ்நாடு

tamil nadu

108 ஆம்புலன்ஸ் ஒட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்!

By

Published : Aug 29, 2020, 9:10 PM IST

புதுக்கோட்டை: 108 ஆம்புலன்ஸ் ஒட்டுநர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

108 ஆம்புலன்ஸ் ஒட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்
108 ஆம்புலன்ஸ் ஒட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் தங்களுக்கு நிரந்தர படி வழங்க வேண்டும், மருத்துவமனையில் ஆண்பணியாளர், பெண்பணியாளர் என பணிபுரிந்து வரும் நிலையில் தங்களுக்கு என தனி அறை ஏதும் இல்லை.

சில மாவட்டங்களில் 108 ஆம்புலன்சில் ஏதாவது சிறு கோளாறு என்றால் அதை நாங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

அதற்கு நாங்கள் பொறுப்பல்ல, வாகனம் நன்றாக இருந்தால் தான் நாங்கள் இயக்க முடியும். அதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டத்தில் மொத்தம் 26 ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளன, குறிப்பாக இரண்டாவது பெரிய நகராட்சி பகுதியான அறந்தாங்கி அதையடுத்துள்ள மணமேல்குடி, ஆவுடையார்கோவில் ஒன்றிய பகுதிகளயும் சேர்த்து மூன்று 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள்தான் இயக்கப்படுகின்றன.

மேலும் விடுமுறை சம்பளம் வழங்காமல் விடுப்பு எடுக்க சொல்லி கட்டாயபடுத்தும் CVK-EMRI நிர்வாகத்தை கண்டித்தும் 108 வாகன ஒட்டுனர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details