தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 24, 2020, 3:41 PM IST

ETV Bharat / state

காயமுற்ற மயிலுக்கு தண்ணீர் கொடுத்து உதவிய இளைஞர்கள்!

பெரம்பலூர்: சாலையை கடக்க முயன்றபோது வாகனம் மோதி அடிபட்டு கிடந்த மயிலை அப்பகுதி இளைஞர்கள் மீட்டு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர்.

காயம் அடைந்த மயிலுக்கு உதவிய இளைஞர்கள்!
காயம் அடைந்த மயிலுக்கு உதவிய இளைஞர்கள்!

பெரம்பலூர் மாவட்டத்தில் வெண்பாவூர், பாடாலூர், சித்தளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில் மான், மயில் உள்ளிட்ட வன உயிரினங்கள் அதிக அளவில் உள்ளன.

இந்நிலையில், பெரம்பலூர் - அரியலூர் சாலையில் மருதையான் கோவில் என்ற இடத்தில் சாலையை கடக்க முயன்ற மயில் மீது வாகனம் மோதியது. இதில் காயமுற்ற மயில் சாலையில் நிராதரவாகக் கிடந்தது. இதைக் கண்ட அப்பகுதி இளைஞர்கள் மயிலை மீட்டு அதற்கு தண்ணீர் கொடுத்தனர்.

இதைத் தொடர்ந்து கால்நடை மருத்துவமனைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவர்கள் மயிலுக்கு சிகிச்சையளித்தனர். பின்னர் மயில் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையும் படிங்க: குழந்தையை தரையில் அடித்துக் கொன்ற தந்தை கைது!

ABOUT THE AUTHOR

...view details