தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தாய் திட்டியதில் மனமுடைந்த இளைஞர் தற்கொலை! - பெரம்பலூரில் தாய் திட்டியதில் மனமுடைந்த இளைஞர் தற்கொலை

பெரம்பலூர்: ஆலம்பாடி அருகே குடித்துவிட்டு வந்த மகனை, தாய் திட்டியதால் மனமுடைந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தாய் திட்டியதில் மனமுடைந்த இளைஞர் தற்கொலை
தாய் திட்டியதில் மனமுடைந்த இளைஞர் தற்கொலை

By

Published : May 9, 2020, 12:33 PM IST

பெரம்பலூர் ஆலம்பாடி சாலை எம்ஜிஆர் நகரில் வசித்துவருபவர்கள் அப்துல் ரசாக் - சராம்பாள் தம்பதியினர் . கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அப்துல் ரசாக் இறந்துவிட்டார்.

இவர்களுக்கு மூன்று மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவர்களுடைய இளைய மகன் சதாம் உசேன் என்பவர் பெரம்பலூரில் உள்ள கம்பி விற்பனை கடையில் வேலை செய்துவந்தார்.

இந்நிலையில், நேற்றிரவு குடித்துவிட்டு வீட்டிற்குச் சென்ற சதாம் உசேனை அவரது தாய் சாராம்பாள், ஏன் குடிக்கிறாய் என திட்டியுள்ளார்.

இதனால் மனமுடைந்த சதாம் உசேன், வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், சதாம் உசேனின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: குடிபோதையில் தன்னைத்தானே குத்திக்கொண்ட இளைஞர்!

ABOUT THE AUTHOR

...view details