பெரம்பலூர் மாவட்டம் புது வேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன் (50). இவர் ஆலத்தூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டின் துக்க நிகழ்விற்கு சென்று விட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சாலையை கடக்கும் போது, சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வந்த கனரக வாகனம் ஒன்று இவரது இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், ரங்கநாதன் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.