தமிழ்நாடு

tamil nadu

மது போதையில் தற்கொலை செய்துகொண்ட தலையாரி!

By

Published : Nov 18, 2019, 8:06 PM IST

பெரம்பலூர்: குடும்ப பிரச்னை காரணமாக மது போதையில் கிராம உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மது போதையில் தற்கொலை செய்து கொண்ட தலையாரி

பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியில் மாரியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் வெங்கடாச்சலம், இவர் துறைமங்கலம் கிராம உதவியாளராக (தலையாரி) பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு தொடர்ச்சியாக மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது, அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிகிறது.

இதனிடையே நேற்று வழக்கம்போல் மது அருந்துவிட்டு மனைவியிடம் சண்டையிட்டபோது ஏற்பட்ட பிரச்னையால், தனது வீட்டு விட்டத்தில் வேட்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மது போதையில் தற்கொலை செய்து கொண்ட தலையாரி

தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த பெரம்பலூர் போலீசார், தற்கொலை செய்து கொண்ட தலையாரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details