தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்: இருவர் உயிரிழப்பு! - பெரம்பலூர் இரு சக்கர வாகன விபத்து

பெரம்பலூர்: செங்குணம் பிரிவு சாலையில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரு சக்கர வாகனங்கள் மோதியதில் இருவர் பலி

By

Published : Oct 29, 2019, 5:28 PM IST

Updated : Oct 29, 2019, 6:36 PM IST

பெரம்பலூர் மாவட்டம் செங்குணம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார். இவர் பெரம்பலூரிலிருந்து செங்குணம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அதேப் பகுதியைச் சேர்ந்த அன்பு குமார், அருள்குமார் ஆகியோர் செங்குணம் கிராமத்திலிருந்து பெரம்பலூர் நோக்கி வந்துகொண்டிருந்தனர்.

இருசக்கர வாகனங்கள் மோதியதில் இருவர் பலி

செங்குணம் பிரிவு சாலையில் வேகமாக வந்த இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டது. பின்னர் அவசர ஊர்தி 108-க்கு தகவல் கொடுக்கப்பட்டு மூவரும் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

அஜித்குமார், அன்பு குமார் ஆகியோர் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்த அருள்குமார் தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றார். இது குறித்து பெரம்பலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

இதையும் படியுங்க:

தேசம் முதல் மாநிலம் வரை... சுஜித்துக்கு அரசியல் தலைவர்களின் இரங்கல்!

Last Updated : Oct 29, 2019, 6:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details